நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605 003.
சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் விதமாக, பல்வேறு தலைப்புகளில் கதைகளை அளித்துள்ளார் ஆசிரியர். அன்பு, பொறுமை, ஒற்றுமை, உண்மையும் நேர்மையும் போன்ற தலைப்புகளில், ஒவ்வொன்றிலும் 11 கதைகள் உள்ளன. தன்னம்பிக்கையும் உழைப்பும் தலைப்பில் 13 கதைகளும், பேச்சு தலைப்பில் 12 கதைகள், கல்வி தலைப்பில் 10 கதைகள், சொர்க்கம்- நரகம் தலைப்பில் 12 கதைகளும் உள்ளன. பெரிய பெரிய எழுத்துக்களில், படங்களுடன் உள்ளதால் சிறுவர்கள் மட்டுமல்லாமல், பெரியவர்கள் படித்து குழந்தைகளுக்கு சொல்லலாம்.