விநாயகரை போற்றும் அந்தாதி பாடல்கள். நான்கு வகை இலக்கணம், நான்மணி அந்தமும் ஆதியுமாய் படிக்கப் படிக்க இனிப்பவை.
ஞானம், அறிவுக்கு மிக அருமையான விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. இருக்கும் பாத்திரத்தை பார்த்து அறிவது அறிவு. பாத்திரத்தின் உள்ளே இருக்கும் பானத்தை பருகி உணர்வது ஞானம். இளைய தலைமுறைக்கு உணர்த்தப்பட வேண்டிய உண்மை.
உயிரினங்கள் எல்லாம் இன்புற்று பழியற்று வாழ வேண்டும் என்பது வேத வாக்கு. அரசுக்கும், ஆள வந்தவர்களுக்கும் ஒழுக்க நீதி.