முகப்பு » கட்டுரைகள் » சுய மரியாதை

சுய மரியாதை

விலைரூ.50

ஆசிரியர் : கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘சுதந்திரம் போல் சுய மரியாதையும் மனிதர்களின் பிறப்புரிமை. அடுத்தவரிடம் இருந்து இதை பறிக்கக் கூடாது; நாம் பறி கொடுக்கவும் கூடாது. இதுவே வாழ்வின் மகத்துவம்’ என்பதை வலியுறுத்தும் நுால்.

சுய மரியாதை குறித்து இஸ்லாம், நபிகள் அருளிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் கட்டுரைகளாக தொகுத்துள்ளார். வசதி படைத்தவர்களைப் பார்த்து தாழ்வு கொள்வது பாவம்; மூதாதையர் என்பதற்காக அவர்கள் கருத்தை ஆராயாமல் ஏற்கும் மூடத்தனம், சுயமரியாதையை பாதிக்கும்; வழிபாடு துவங்கி பணம், புகழ், பதவி என எதையும் வெறிகொண்டு தொடர்வது  இழிவு.

திட்டும் ஒருவரை திருப்பித் திட்டாமல் பதில் அளிப்பது; தெரியாததை தெரியாதென ஒப்புக் கொள்வது போன்ற செயல்களும் சுயமரியாதையின் வெளிப்பாடே என எடுத்துரைப்பதை மேற்கோள்களோடு தெரிவிக்கிறது.

மேதகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us