விடுதலைப் போரில் தீரமுடன் போராடிய பெண்களை விரிவாக அறிமுகம் செய்யும் நுால். வரலாறு மறந்தவர் மற்றும் மறைக்கப்பட்டவர் பற்றியும் நெகிழ்ச்சியான தகவல்கள் உள்ளன. கோவில் வழிபாட்டு தேவதையாக புகழ் பெற்றுள்ளதையும் குறிக்கிறது.
அதிகாரத்தால் அடக்கிய ஆங்கிலேயருக்கு எதிராக, நாட்டுப் பற்றுடன் எழுச்சி கொண்ட பெண்களின் செயல்பாடு, வரலாற்று பின்னணியுடன் தரப்பட்டுள்ளது. மொத்தம், 45 கட்டுரைகளில் போராட்ட பின்னணி பற்றிய அறிமுகமும் தரப்பட்டுள்ளது.
தேசப்பற்றால் எழுச்சி கொண்ட பலரது வரலாறு அறியப்படாதது. அது பற்றி தகவல்களை சிறப்பாக திரட்டி எளிய நடையில் தரப்பட்டுள்ளது. பெண்கள் தியாகத்தை போற்றும் நுால்.
–
ராம்