நேசம் வளர்த்தல், தேசம் பேணல், அறம் போற்றல், ஊக்கம் இழக்காமை, பகையறுத்தல், நன்றி மறவாமை, நாவடக்கம், மரபு காத்தல், சுய ஊர் விவரணை போன்ற சமூக நிகழ்வுகளை மையப்படுத்திய புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். மின் வாரியம் குறித்த கவிதைகளும் அடக்கம்.
ஒவ்வொரு கவிதையும், அது எந்த பா வகையைச் சார்ந்தது என்ற குறிப்போடு எழுதப்பட்டு உள்ளது. இது, மொழி ஆர்வலர்களுக்கும், புதிதாய் மரபுக் கவிதை புனைய முனைவோருக்கும் உதவியாக இருக்கும். குறட்பா, பக்றொடை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கழிநெடிலடி மண்டிலம், நிரையசைக் கட்டளைக் கலிப்பா, நேரசைக் கட்டளைக் கலித்துறை, வெண்கலிப்பா என பல விதமாக கவிதை உணர்வு கடத்தப்பட்டுள்ளது. மரபுக் கவிதை ஆர்வலர்களுக்கான நுால்.
-– சையது-