இளையோர் எனப்படும் பதின்ம வயதினர் சிந்திக்க ஏற்ற விதத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மிடுக்கு வாழ்வில் ஏற்படும் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இளம் வயதில் சந்திக்கும் பிரச்னைகள் சார்ந்து சிந்தனையை விரித்துள்ளது. தோற்றத்தில் நடத்தையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் போக்கை இயல்பாக சித்தரிக்கிறது. மிக நுட்பமான புனைவுகள் வெளிப்பட்டுள்ளன. சுருக்கமான உரையாடல்கள் அமைத்து கருத்தை வெளிப்படுத்துகிறது.
துறுதுறுப்பான பருவத்தின் செயல்பாடுகளை கண்ணியமுடன் பதிவு செய்கிறது. அறிவுரைக்காமல் அனுபவ வெளியை உணரும் வகையில் கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுப்பில் மொத்தம், 16 சிறுகதைகள் உள்ளன. அனுபவத்தின் திரட்சிகளாக மிளிர்கின்றன. சிந்தனையையும் துாண்டும் நுால்.
– ஒளி