பாரதி, 1 ஜெகத் அவென்யூ, எட்டாவது குறுக்குத் தெரு, நியூ காலனி, குரோம்பேட்டை, சென்னை -44. பக்கம்:160
முப்பத்தி ஐந்து வயது இளவரசர் போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்று கவுதம புத்தராக உயர்ந்தவர். இதற்கு ஓர் ஓப்பீடாக, தென் தமிழகம் திருக்கோவில் ஒன்றின் புளிய மரத்திடியினை அகலாத பதினாறு வயதுச்சிறுவன் சாகோபன், உலகியல் பற்றற்ற நிலையதனை அடைந்திட பரம்பொருளின் திருவருளும் அவசியமென வலியுறுத்தியதுடன், வேதங்களின் சாரங்களைப் பிழிந்தெடுத்து, அற்புதமான ஆன்மிக நூல்களை அருளிச் செய்து வைணவர்கள் போற்றும் ஆழ்வாராகத் திகழ்ந்தான். இந்த கட்டுரையே நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. மேலும், இந்நூலில் மெய்சிலிர்க்கும் வண்ணம் 21 தலைப்புகளில் பக்தி ரசம் சொட்டுவதாகவும், இலக்கிய மணம் கமழ்வதாகவும் தகவல்கள் உள்ளன.