முகப்பு » வரலாறு » போருக்குத் தயார்!

போருக்குத் தயார்!

விலைரூ.50

ஆசிரியர் : தியாகி ஐ.மாயாண்டி பாரதி

வெளியீடு: பாரதி பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்கு தான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. ‘‘சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்து விட்டது. தயார்! தயார்! என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு கொண்டிருக்கட்டும். அகிம்சை என்ற அழிக்கப்பட முடியாத இரும்பு கவசங்களை இறுக தரித்து கொள்ளுங்கள்...குண்டுத்தீயை கக்கி எம்மை குறுகி வந்த போதினும், உண்டு வீரம் எதிர்க்கவென்று ஓங்கி கொட்டு பேரிகை’’ என, சுதந்திர போராட்ட காலத்தில் தன், 22 வது வயதில் ஐ.மாயாண்டி பாரதி எழுதி, விடுதலை வேட்கையை ஏற்படுத்தி உள்ளார். தேசத்தலைவர்கள், மதுரை பரவை கிராமத்தில், 1938ல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் காலடியில் மாயாண்டி பாரதி இருப்பது  உள்ளிட்ட அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது, படிக்கவும், பார்க்கவும் ஆவலை தூண்டுவதாக உள்ளன.
மேஷ்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us