கொள்கை அரசியல் என்று ஆரம்பித்து, கொள்ளை அரசியல் என்று ஆகியிருக்கிறது இன்றைய நாட்டு அரசியல் நிலவரம். ஊழலையும், முறைகேடுகளையும், மிகப் பெரிய அளவில் செய்வது என்பது அரசியல் சாகசம் என்றாகி விட்டது. நடைமுறை அரசியல் ஊழல்மயமானதாகவும், ஊழல் நடைமுறையாக ஆனதாகவும் ஆன இந்த காலக்கட்ட அவலங்களை விவரிக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். நேர்மையானவர்கள் படித்து விட்டு மனம் குமுறலாம்! பாவம்... அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? – மயிலை கேசி