இந்நுாலில் உள்ள கதைகளில் இடம்பெற்ற மாந்தர்கள் இருவர் பேசுவதை, தாமே பேசுவது போன்ற புது உத்தியை ஆசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ‘வீடு, பணிவு, வாடகை, ஆட்டோ, செல்லம், சாதுர்யம், புத்திசாலி, அப்படி இப்படி, போட்டோ, சிம்பிள், தீபாவளி, சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ உள்ளிட்ட கதைகள், இன்றைய சமுதாயத்திற்கு பாடம் கற்பிப்பதாக உள்ளன.