ஆவிகளுடன் தியானம், பிரார்த்தனையால் பேச முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகள் அடங்கிய நுால். ஆவியுடன் பேசி பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்ல முடிந்திருக்கிறது என நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ளது.
தெய்வபக்தி மிகுந்ததால் ஆறுமுகன் அருள் கிடைத்தது என்றும், கேட்கும் கேள்விகளுக்கு பதிலை எழுத வைக்கிறான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் இழந்த நிலையில் ஒருவனை பங்குச் சந்தையில் கொஞ்சம் ஷேர் வாங்கச் சொல்லி உத்தரவு வந்ததையும், ஹர்ஷத் மேத்தா ஊழல் பங்குச்சந்தையில் கொடிகட்டி பறந்த போது, அந்த சில ஷேர்கள் மூலமே மிகப்பெரிய பணக்காரர் ஆகி விட்டதையும் குறிப்பிடுகிறது. ஆற்றோட்டமான நடை அழகு, கர்ம வினையின் அழுத்தத்தை புரிய வைக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்