சித்தர்களின் மந்திரக்கலையில் கூறப்பட்டுள்ள செய்திகளை உள்ளடக்கிய நுால். கந்த சஷ்டி கவசத்தில் வரும் ஒலிகள் அரிய மந்திரங்கள். இந்த ஒலிகளை வகை அறிந்து உச்சரித்தால் சித்தியாகும் என, அவற்றை உச்சரிக்கும் வழிமுறைகள் குறித்த அரிய செய்திகளை ஆய்ந்துரைத்துள்ளது.
‘ஓம் நமசிவாய’ என்று ஜெபித்தால், காலனை வெல்லலாம். மந்திரம் உச்சரிக்க, உடலில் உண்டாகியிருக்கும் நோய்கள் தீரும் என்கிறது. அகத்தியர், நந்திசர், கருவூரார் கூறியுள்ள மந்திர வழிமுறைகளையும், பூஜை விதிகளையும், அஷ்ட கன்ம மந்திரங்களையும் எளிய நடையில் விளக்கிச் செல்கிறது.
மந்திரக்கலை என்பது இறைவனை தரிசிக்க கிடைத்த அற்புத வழி. இதை, அழியாது காக்க வேண்டும் என்ற கருத்துள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்