ஆங்கிலேய எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பாக வந்துள்ள நுால். சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் மொழிபெயர்த்து வெளியிட்டது, மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
முதலில் வெளியிட்ட போது எழுதிய முன்னுரையும் தரப்பட்டுள்ளது. வ.உ.சி.,யின் வாழ்க்கைக் குறிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. முழுதும் நம்பிக்கையூட்டும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கை வரலாற்று சுருக்கமும் இடம் பெற்றுள்ளது.
எளிய உதாரணங்களுடன் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துக்கள் உள்ளன. சில இடங்களில் அழகிய சிறுகதை போல் சொல்லப்பட்டுள்ளது. வலிமை மிக்க வாழ்வுக்கு வழி சொல்லும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால்.
–
மதி