கண்ணதாசனின் பழைய பாடல்களின் மெட்டை அடிப்படை அளவுகோலாக வைத்து, புனையப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். நல்ல படைப்பின் அடையாளம், வாசகனை படைப்பாளியாக்குவதே என்ற அடிப்படையில் உருவாகியுள்ளது.
‘காசே தான் கடவுளடா’ மெட்டில், ‘அன்பே தான் மந்திரமே; அந்த ஆண்டவனும் அன்புருவே’ என்ற கவிதையும், ‘அணைக்கிற கை தான் அடிக்கும்’ மெட்டு, ‘உழைத்திட மனிதன் உயர்வான்; பகிர்ந்திடும் மனமே மகிழும்’ என்ற கவிதையும், ‘நாடு அதை நாடு’ பாடல், ‘பாடு தமிழ் பாடு; அதைப் பாராட்ட ஈடிங்கு ஏது’ என்ற கவிதையாகவும் உருமாறி நிற்கிறது.
பழைய திரைப்பாடல் ரசிகர்களும், பாடலாசிரியராக முயற்சிக்கும் புதியவர்களும் வாசிக்க ஏற்ற நுால்.
–
சையத் அலி