தேசிய கவி பாரதியார் பற்றி புதிய வியப்பூட்டும் தகவல்களை, 65 தலைப்புகளில் தொகுத்துள்ள நுால். பிள்ளைப் பருவ காதல் இலைமறை காயாக கூறிய விதம் சுவாரசியம்.
அக்கால குழந்தை திருமணங்கள், கணவனை இழந்த பெண்கள் அனுபவித்த துன்பம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. காசியில் காளியை வெறுத்த பாரதி, பின்னாளில் பக்தராக மாறியதும் புது தகவல்.
கனகலிங்கம் தவிர மற்றொருவருக்கும், பாரதி பூணுால் அளித்த தகவல் கூறப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர் சிவாஜி காலத்தில், இஸ்லாமியர்களால் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய விஷயங்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. தீண்டாமை, தீண்டத்தகாதவர் சர்ச்சைக்கு பாரதி வைத்த முற்றுப்புள்ளி படமாக தரப்பட்டுள்ளது.
புது கண்ணோட்டத்தில் அரிய தகவல்களை அளித்துள்ள நுால்.
– முகில் குமரன்