பிரபல அரசியல் பிரமுகர் சைதை துரைசாமியின் மனிதநேய பண்புகள் பற்றி எடுத்துரைக்கும் நுால். அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களின் எண்ணத் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
வாழ்வில் உயர்ந்த நோக்கமும், பொதுவெளியில் மனிதநேயத்துடன் செயல்படுபவர் என்பதை நிகழ்வுகள் வாயிலாக சுட்டிக்காட்டுகிறது. அதை முன்நிறுத்தும் சம்பவங்கள் தரப்பட்டுள்ளன.
இயற்கை உணவை தேர்வு செய்தது, திட்டமிட்டு பணிகளை ஆற்றும் பாங்கு, நம்பியோருக்கு உதவும் மாண்பு, தங்கு தடையற்ற மனிதநேய செயல்பாடு, துடிப்பான நடவடிக்கைகள், தோல்விகளைக் கண்டு சோர்ந்து போகாத மனம் என, பண்பு நலன்களை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. முயற்சியால் முன்னேற துடிப்போருக்கு நம்பிக்கை தரும் விதமாக மலர்ந்துள்ள நுால்.
– மலர்