வெவ்வேறு திசை நோக்கி பயணிக்கும் புராணம், வரலாறு, சமூகம் சார்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
திரவுபதி அமர தொடையை காட்டிய துரியோதனனை, பீமன் கதாயுதத்தால் தாக்கிய வர்ணனை அழகாக உள்ளது. சமூக கதையில் ஒரு பெண் நினைக்கும் வர்ணனை உண்மையில் வித்தியாசமாக, ‘இவர்களுக்கு மனைவி அழகாக இருந்தால் அடுத்தவன் ரசிப்பானோ என்ற பயம்’ என்கிறது.
மகளை மணவறையில் பார்க்கும் தகப்பன் நினைவோட்டத்தில் குழந்தை பிறந்தது, படித்தது, வளர்ந்தது என தகிக்கும் நினைவுகளை மறைத்து, கலங்காமல் அடுத்த பெண்ணை கரையேற்றும் மனதை காட்டுகிறது.
– சி.சாத்தன்