இலங்கை தமிழர் வாழ்வை பேசும் கதை தொகுப்பு நுால். வாழ்வியல், பண்பாடு, காதல், பிரிவாற்றாமை, தெய்வ நம்பிக்கைகள், புலம்பெயர் இன்னல்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.
மன அழுத்தங்களும், மனப் புழுக்கங்களும் காதலில் கரைந்து போனதை உணர்த்தும் சிவகாமி, நானும் சிதம்பரனே எனும் கதையும், இளமையும், காமமும் ஒருவழி நில்லா என்பதை உணர்த்தும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.
வன்னி தெய்வம் நாகத்தில் ஊர்ந்து வந்ததாய் நம்பும் நம்பிக்கையை விதைக்கிறது நாகமணி என்னும் சிறுகதை. ஒரு கிராமத்தின் விரக தாபத்தை வெளிப்படுத்துகிறது விளாத்தி நிலம் குறுநாவல்.
இலங்கை தமிழர் வாழ்வை பேசும் நுால்.
– புலவர் சு.மதியழகன்