கரிசல் மண்ணின் வாழ்வை படம்பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விருதுநகர் மாவட்டத்தின் இலக்கிய வளத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.
தொகுப்பில், 60 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் துவங்கி, இப்போது எழுதி கொண்டிருப்போர் வரை, மண்ணின் மணத்தை பரப்பும் ஆக்கங்கள் உள்ளன.
விருதுநகர் வட்டார வாழ்வின் பன்மை கலாசாரத்தையும், மேம்பட்ட சிந்தனைகளையும் வெளிப்படுத்துகிறது. ஒரு வட்டாரத்தின் வளர்ச்சி என்பது, அங்கு மலர்ந்துள்ள படைப்பு செயல்பாட்டின் செழுமையும் சேர்ந்தது என்பதை உணர்த்துகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அரிய முயற்சியில் மலர்ந்துள்ள இலக்கிய களஞ்சியம்.
– ஒளி