நாடகங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒப்பனை, இசை, ஓவியம், மேடை அமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி கலைகளின் சேர்க்கையாக உள்ளது.
நகர மக்கள் காட்டிய அலட்சியத்தையும், கிராமத்தின் உணர்ச்சி மிகுந்த பாசத்தையும் வெளிப்படுத்துகிறது, ‘முடிவில் ஒரு விடியல்’ என்ற நாடகம். வரவுக்கு மீறி செலவு செய்து வம்பில் மாட்டிக்கொள்ளும் அவலத்தை உணர்த்துகிறது, ‘ஆசைகள்’ என்ற படைப்பு.
திருவிழாவில் துப்பறிவது போல் அமைந்துள்ளது, ‘இருளில் ஒளிந்த வெளிச்சங்கள்’ நாடகம். எளிமையான உரையாடல்கள் விழிப்புணர்வை ஊட்டி ஈர்க்கும் வகையில் உள்ளன. அங்க அசைவுகளோடு தொகுத்து தருகிறது. நாடக தொகுப்பு நுால்.
-– புலவர் சு.மதியழகன்