ஆங்கிலேய அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட நுால். இந்தியாவின் தென்பகுதியில் நில வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. பல பகுதிகளில் வசித்த மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் நிலை, அன்றைய சமூக நிலை, திட்டச் செயல்பாடு என தகவல்கள் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் கவர்னராக இருந்த மன்றோவின் கருத்துகளும் ஆவணமாக இடம்பெற்றுள்ளன.
நில உடைமையை பெற்றிருந்த மிராசி உரிமை பற்றிய தகவல்கள் தரப்பட்டு உள்ளன. சொத்தை அனுபவிப்பதற்கான ஒப்பந்த கால விபரமும் உள்ளது. ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்ட நடைமுறை, அதற்கு முன் நிலம் தொடர்பாக இருந்த நம் நாட்டு நடைமுறை பற்றிய விபரங்களும் ஆவணங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நில உரிமை பற்றிய ஆவணமாக திகழ்கிறது. தமிழக நில வரலாற்றில் முக்கிய நுால்.
– ஒளி