பூமியில் ஏற்படும் பேரிடர் செய்திகளை தாங்கி நிற்கும் நுால்.
பூகம்பம் பற்றி விரிவாக அலசுகிறது. நிலச்சரிவு இயற்கையால் ஏற்பட்டாலும் அதை தீவிரப்படுத்துவது மனிதனின் பங்கே என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறது. நிலநடுக்கத்தின் போது தற்காத்துக் கொள்ளும் வழிமுறை சொல்லப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புத் திட்டம் பற்றிய தகவல்கள் உள்ளன. புவி வெப்பமயத்துக்கு மனித குலமே காரணமாவதை குறிப்பிடுகிறது. போர்களால் ஏற்படும் பேரிடர்களை அறியத் தருகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்வதே பாதுகாப்பு என உணர வைக்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்