நேருவின் செயல்பாட்டை முன்வைக்கும் நுால். வளர்ச்சிக்கான சிந்தனையின் பின்புலத்தை முறைப்படி ஆராய்ந்து கருத்துகளை வெளிப்படுத்துகிறது.
உலக அளவில் வரலாறு, தத்துவங்கள், சமயங்கள், இலக்கியம், சமூக, அரசியல் நடவடிக்கைகளை நேரு எந்த விதமாக அணுகி புரிந்து கொண்டார் என்பதன் சாரமாக புத்தகம் அமைந்துள்ளது. காலனித்துவ ஆதிக்கம், கருத்துரிமை சார்ந்த தெளிவான செயல்பாடுகள் பற்றியும் விவரிக்கிறது.
நேருவின் தனித்துவ சிந்தனைகளுடன், இன்றைய நடப்புகளை பொருத்தி ஆராய்ந்து, கருத்துகளை வெளிப்படுத்துகிறது. நேரு வாழ்ந்த காலத்தை அலசி சிந்தனைகளை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. இந்திய நாடு உருவாக்கப்பட்டதில் நேருவின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய நுால்.
– ராம்