ஹோல்கர் வம்சத்தில் பிறந்த அஹில்யாபாய் வாழ்க்கை மற்றும் ஆட்சி பற்றி கூறும் நுால்.
கணவனை இளமையிலே இழந்த அஹில்யாபாய், ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நிலையை அறியத் தருகிறது, சமய, கலாசார மோதல்களை தணித்து நல்லிணக்கம், அமைதி நிலை ஏற்படுத்திய பெருமையை அறியச் செய்கிறது. அந்த காலத்தில் சமூகத்தில் நிலவிய நெருக்கடிகளையும் பதிவு செய்துள்ளது.
அக்பர் ஆட்சிக்கு பின் சமூக சூழல், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி எழுச்சியால் மீட்டுருவாக்கம் பெற்றது. பின், ஹோல்கர் வம்சத்தால் மேம்பட்டதை விவரிக்கிறது. இளம்பருவத்தில் நெருக்கடி காலங்களில் அஹில்யாபாய் தன்னை தகவமைத்துக் கொண்ட செய்திகளுடன் நெகிழ வைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு