வயிற்றுக்கு மட்டும் வரக்கூடிய நோய்களை தடுக்கும் வழிமுறைகளை விளக்கும் நுால். புரியும் வண்ணம் உள்ளது.
குண்டு மனிதர்களுக்கு பெரிதாகவோ, சிறிய உருவம் உள்ளோருக்கு சிறிதாகவோ வயிறு இருப்பதில்லை என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. எல்லாருக்கும் ஒரே அளவு உடைய வயிறு தான் உள்ளதாக குறிப்பிடுகிறது. சாப்பிட்ட உணவு ஜீரணிக்க, இரைப்பை ஒவ்வொரு நாளும் 3 லிட்டர் செரிமான திரவம் சுரக்கச் செய்யும் உண்மையை பகிர்கிறது.
சைவ உணவு சீக்கிரம் ஜீரணமாகும்; அவசரமாக சாப்பிடுவதை தவிர்த்தால் நோய் வராது என எடுத்துரைக்கிறது. காலையில் அரசனை போல், மதியம் இளவரசனை போல், இரவில் பிச்சை எடுப்பவனை போல் சாப்பிட அறிவுரைக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்