ஆங்கில மூலம்: சுவாமி ஹர்ஷானந்தர். வெளியீடு: ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 218.)
.
கடவுள் என்பது ஒன்றே என்பதை உலகில் எல்லா மதங்களும், இந்து சமயம் உட்பட ஒப்புக் கொள்கின்றன. அப்படியானால் இந்து மதத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும், அவற்றிற்கு வெவ்வேறு வடிவங்களும், சக்திகளும் சொல்லப்பட்டிருப்பது ஏன்? இந்த கேள்வி ஏனைய மற்ற மதத்தினர் மட்டுமின்றி இந்து சமயத்தைச் சார்ந்த பலருக்கும் குழப்பதையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவது தான். அதற்கு அருமையான விளக்க நூலாக எழுதப்பட்டது தான் இந்த நூல்.