ராம கிருஷ்ண மடம், மயிலை, சென்னை-4. (பக்கம்: 76.)
"அன்னையும், தந்தையும் தானே பாரில் அண்ட சராசரம் - கண் கண்ட தெய்வம்!' என்று பாடினார் எம்.கே.டி.பாகவதர்.
முற்றும் துறந்தாலும், முழு முதல் கடவுளானத் தன் தாயை - விவேகானந்தர் மறந்துவிடவில்லை!
கேத்ரி ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமிஜி சொன்னார்:
என் மனத்தை அரித்துக் கொண்டு இருக்கின்ற மகா பாவம் ஒன்று உள்ளது. உலகத்திற்குச் சேவை செய்வதற்காக நான் என் தாயை வருந்தத்தக்க விதத்தில் புறக்கணித்ததே அது. எனவே, இனி சில வருடங்களாவது - என் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பது என் கடைசி விருப்பமாக உள்ளது. நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன். இது எனது இறுதி நாட்களையும், என் தாயின் இறுதி நாட்களையும், மனதுக்கு இதமானதாக்கும்.
ஒரு மாபெரும் மகனின், மாபெரும் தாயைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் இதில் உண்டு. நம் தாயை அதிகமாக நேசிக்கத் தூண்டும் அற்புத ஆன்மிகக் கருவூலம்!